Vanabhojana Utsavam on Thai Thiruvonam took place in a grand manner at Kanchi Devarajaswami Temple. On February 8th 2016, in the morning Perumal looked stunning in the green Vastram and along with His Consorts had Purappadu on Pallakku. Later in the evening Sri Perumal and His Ubhaya Nachiyars had Purappadu to Swami Desikan Sannadhi and there Thiruaradhanam was performed. Sri Thoopul Vedanta Desikan and Divyadampathis had Thiruveethi Purappadu and asthanam took place. Thousands of devotees thronged in the Vanabhojana Utsavam to have dharshan of Divyadampathis and received the blessings.
To view the morning purappadu please visit: Kanchi Devarajaswami Temple Vanabhojana Utsavam – Morning Purappadu
The following are the photos taken during the Utsavam:
Courtesy: Sri Krishna Durai
மாலுகந்தவாசிரியன்.
ஸ்ரீதேசிகவிக்ரஹத்யானத்துடன் தாஸனது பதிவுகளை நிறைவு செய்ய தீர்மானித்தேன், மௌனத்ருஹோ முகரயந்தி குணாஸ்தவ்தீயாஃ — கோதாபிராட்டியின் குணங்கள் மௌனத்தை கலைத்து ஸ்தோத்ரம் செய்ய வைத்தது என்கிறக்ரமத்தில் ஸ்வாமி தேசிகனுக்கு நடைபெறும் விபவங்கள் –மரியாதைகள் எனது வ்ரதத்தை பங்கம் செய்து மேலும் சில எழுதும்படி ஆக்ஞாபிக்கின்றன போலும்.
சென்ற வருடம் இந்த உத்ஸவ பதிப்பில் எழுதியது, ஸ்வாமி தேசிகன் தமது ப்ரபந்த்ததில் மாலுகந்தவாசிர்யன் என நம்மாழ்வாரைக்குறிப்பிட்டாலும், நம்மத்திகிரித்திருமால் உகந்தவாசிரியன் நம் தூப்புல் வேதாந்தவாசிரியனே என.
ஸமீபத்தில் ஸ்வாமி தேசிகனைக்குறித்து, தேசிகனுக்கு ஸ்ரீஹயவதன உபாஸநத்தால் மேதாவிலாஸம் வந்து அதடியாக மதிவிப்ரமம் ஏற்பட்டது என்று எழுதியவரின் மற்றொரு கவிதையை படிக்கநேரிட்டது அதில் அவரால் புணைக்கப்பட்ட வரிகள்,
மாநாதீதமஹாகுணௌகஜலதிஃ மாயீபகண்டீரவஃ
மாதங்காசலமௌளிமண்டணமணேஃ மாந்யோ மஹாதேசிகஃ.
மக்நாந் ஸம்ஸ்ருதிஸாகரே மிதமதீந் மாத்ருக்ஜநாந் ரக்ஷிதும்
மர்த்யாகாரமுபேயிவாந் குருவரோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி,
எல்லைகடந்த சிறந்த குணங்களுக்கு கடல் போன்றவரும் மாயாவாதிகளாகிற மதயானைகட்குச்சிங்கம்போன்றவரும்,,தென்னத்தியூரனான தேவப்பெருமாளுடைய திருவருளுக்கு இலக்கானவரும்,பிறவிக்கடலுள் அழுந்தி துளங்குகின்ற என் போன்றவர்களைக் காத்தருள மானிடவேடம் பூண்டவருமான தேசிகர் என்னெஞ்சினுள்ளே திகழவேணும்.
நம்மத்திகிரித்திருமாலுக்கு மாந்யஃ— உகந்தவர் தேசிகர் என.
ஒரு ச்லோகத்தில் , வரதன் தேசிகனைக் கொண்டாடுவதை குறிப்பிட்டார்,
யக்யே தாதுருதித்வரஸ்ஸ வரதஃ ஸ்ரீஹஸ்திசைலேச்வரஃ
ஸ்வீயே வாஹனமண்டபே பரமயா ப்ரீத்யா யமஸ்தாபயந்.
வாரம் வாரமனுக்ரஹம் ப்ரகடயன் வித்யோததே தாத்ருச-
ப்ரக்யாதாமிதவைபவோ குருவரோ மே ஸந்நிதத்தாம் ஹ்ருதி.
அயன் செய்த அயமேத வேள்வியில் அவதரித்த பேரருளாளனால் தன்னுடைய வாஹனமண்டபத்தில் எழுந்தருளப்பண்ணுவித்து அடிக்கடி பஹுமானிக்கப்பெறுகின்ற தேசிகர் என்னெஞ்சினுள்ளே உறைவாராக.
.