ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட மளந்து ஆயர்,
பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம் பொன்மலர் திகழ்,வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் இரைத்தோடி
தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு திருவயிந் திரபுரமே. – பெரிய திருமொழி
பதவுரை
மாவலி வேள்வியில் சென்று இரந்து |
– |
மஹாபலியின் யாக பூமியிலே (மாணியுருவாகிச்) சென்று (மூவடிமண்) யாசித்துப் பெற்று |
ஆங்கு |
– |
அவ்விடத்திலேயே |
அகல் இடம் அளந்து |
– |
பரந்த உலகம் முழுவதையும் அளந்து கொணடவனும் |
ஆயர் பூங்கொடிக்கு |
– |
அழகிய இடைப்பெண்ணான நப்பின்னைப் பிராட்டிக்காக |
இனம் விடை |
– |
ஓரினமான ஏழு ரிஷபங்களையும் |
பொருதவன் இடம் |
– |
போர்செய்து முடித்த பெருமானுறையும் இடமாவது; |
குரங்கு இனம் |
– |
குரங்குகளின் கூட்டமானது, |
பொன்மலர்திகழ் |
– |
பொன்னிறமான மலர்கள் விளங்காநின்ற |
வேங்கை கோங்கு செண்பகம் கொம்பினில் |
– |
வேங்கைமரம், கோங்குமரம், செண்பக மரம் என்பனவற்றின் கொம்புகளிலே |
குதிகொடு இரைத்து ஓடி |
– |
குதித்தல் செய்துகொண்டும் பெரிய ஆரவாரங்கள் செய்துகொண்டும் இங்குமிங்கும் ஓடிக்கொண்டும் |
தேன் கலந்த தண்பலங்கனி நுகரிதரு |
– |
தேன் மிக்க சிறந்த பலாப்பழங்களை உட்கொள்ளப்பெற்ற |
திரு அயிந்திபுரம்-. |
விளக்க உரை
***- குரங்கு+இனம், குரக்கினம்; குரங்குகளைக் கூறியது சபலரான ஸம்ஸாரிகளைக் கூறியவாறாம். நின்றவா நில்லா நெஞ்சினை யுடையராய் ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகிற க்ஷூத்ர பலார்த்திகளான ஸம்ஸாரிகளுக்கும் வாநரங்களுக்கும் ஸாம்யம் பொருந்துமன்றோ: இப்படிப்பட்ட ஸம்ஸாரிகள் விஷய போகங்களிலே மண்டித் திரியாநிற்கச் செய்தேயும் பலங்கனி போன்ற பகவத் குணங்களையும் இடையிடையே அநுபவித்து வாழும்படியைக் கூறியவாறு.
வேங்கைமரம், கோங்குமரம், செண்பகமரம் ஆகிய இவற்றின் பூக்கள் பொன்னிறமா யிருக்குமாதலால் ‘ பொன்மலர்திகழ்’ என்றது. இம்மரங்களைச் சொன்னது (ஸ்வாபதேசத்தில்) நெஞ்சைக் கவர்கின்ற விஷயாந்திரங்களைச் சொன்னபடி, “குதிகொடு” என்றதில், குதி-முதனிலைத் தொழிற் பெயர்: “கொம்பேற்றியிருந்து குதி பயிற்றும்” என்றார்பெரியாழ்வாரும்.
It will be really very use full to have English translation or commentary in all Divya Prabhadam & slokas chapter for the Sri vaishnavas settled in Karnataka & other places.
PLease provide Tamil font and instruction to view these tamil articles.