எத்தனை எத்தனை மஹான்கள்! எத்தனை எத்தனை க்ரந்தங்கள்!- 2

0
1,943 views

This series is from ஸ்ரீ தேசிகன் 7ம் நூற்றாண்டு மலர், சென்னை. Thanks to Raguveeradayal Swami for bringing-out this wonderful details through his blog thiruthiru.wordpress.com

4.உபநிஷத் பாஷ்யகாரர்(ரங்கராமாநுஜமுநி) இவ்வாசார்யர் வேலாமூர் என்னும் அக்ரஹாரத்தில் ஸாமசாகையில் பாரத்வாஜ கோத்ரத்தில் அவதரித்து கீணீர் குன்றம் அநந்த தேசிகன் திருவடிவாரத்தில் வேதாந்த காலக்ஷேபம் செய்து பெருமாள் கோவிலில் தூப்புல் தேசிகன் ஸந்ந்தியின் ஸமீபத்தில் ஏகாந்த சீலராய் எழுந்தருளியிருந்து ஸம்ப்ரதாய ப்ரவசனம் செய்து கொண்டு எழுந்தருளியிருந்தார். இவர் அருளிய க்ரந்தங்கள்:

  1. உபநிஷத் பாஷ்யம். .2. பாவப்ரகாசிகா (ச்ருத ப்ரகாசிகா வ்யாக்யா) .3. மூலபாவப்ரகாசிகா (ஸ்ரீபாஷ்ய வ்யாக்யா) .4. சாரீரக சாஸ்த்ரார்த்த தீபிகா .5. ந்யாயஸித்தாந்ஜநடீகா .6. விஷயவாக்ய தீபிகா .7. திருவாய்மொழி .8. திருப்பாவை வ்யாக்யா (ஸம்ஸாகிருதீ கரணம்) .9. தத்வ நிஷ்கர்ஷ: .10. ப்ரதிதந்த்ர பரிஷ்க்ரியா .11. ரஹஸ்யத்ரயஸார டீகா .12. ஸார தாத்பர்ய நிர்ணய: .13. ராமாநுஜ ஸித்தாந்த ஸார: .14. பாஷ்யோபயுக்த்த உபநிஷத் பாஷ்ய விவரணம்.

5.ந்ருஸிம்ம ராஜ: (ந்ருஸிம்ம தேவ ஸ்ரீவத்ஸ கோத்ரத்தில் அவதரித்தவர். இவர் க்ரந்தங்கள். .1. ஸர்வார்த்த ஸித்திவ்யாக்யா ஆநந்ததாயிநீ .2. பேததிக்கார ந்யக்கார: .3. சததூஷணிவ்யாக்யா .4. நிக்ஷேபரக்ஷா வ்யாக்யா.

6.வேதாந்த ராமாநுஜ முநி (ஸாக்ஷாத் ஸ்வாமி) இவ்வாசார்யர் திருநாராயணபுரத்தில் அவதரித்து பால்யத்திலேயே ஸந்யஸித்து பரமவிரக்தேஸராய் ஸ்ரீரங்கத்தில் ஸம்ப்ரதாய ப்ரவசநம் பண்ணிக்கொண்டு எழுந்தருளியிருந்தார். இவர் அருளிச்செய்த க்ரந்தங்கள்:

1. ஸ்ரீதத்வ ஸித்தாஞ்சனம் (ஸ்ரீலக்ஷ்மிக்கு ஈஸ்வரத்வாதி ப்ரதிபாதகம்) .2. ந்யாஸவித்யா தர்பணம் .3. பூர்வஸாராஸ்வதீநீ (ரஹஸ்யத்ரயஸாரவ்யாக்யா) .4. இருபத்திநாலாயிரப்படி (திருவாய்மொழி ஆறாயிரப்படிக்கு வ்யாக்யாரூபம்) .5. இருபத்தி நாலாயிரப்படி சப்தார்த்தம்.

7.திருக்குடந்தை தேசிகன்; (கோபால தேசிகன்) ஆத்ரேய வம்சத்தில் அவதரித்து ஸ்ரீரங்கத்திலும் திருக்குடந்தையிலும் எழுந்தருளி இருந்து ஸம்ப்ரதாய ப்ரவசனம் செய்து வந்தார். இவர் அருளிய க்ரந்தங்கள்;

.1. நிக்ஷேப சிந்தாமணி .2. ரஹஸ்யத்ரயஸார வ்யாக்யா (உத்தரஸாராஸ்வதிநீ ) .3.ஆஹ்நிகம் .4. ஜயந்தீ நிர்ணயம் .5. திருப்பல்லாண்டு வ்யாக்யா .6. கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யா .7. ஸாராஸ்வதிநீ ஸங்கரஹ: .8. அபயாப்தாம்ருத த்யான ஸோபாநம் (இது அடியேன் குறிப்பு; திருக்குடந்தை தேசிகன் இயற்றிய ஸ்ரீ தேசிக ஸஹஸ்ரநாமம் பற்றி குறிப்பிடவில்லை. ஏன் என்று தெரியவில்லை)

. .8. ஸுரபுரம் வெங்கடாசார்ய:பெரிய திருமலை நம்பி வம்சமான சடமர்ஷண குலத்தில் அவதரித்தவர். பலவிதமான யாகாதிகளைப் பண்ணி பெரிய அநுஷ்டான சீலராய் எழுந்தருளி இருந்தார். இந்த ஸ்வாமி ஹயக்ரீவ ப்ரஸாதமும் ஸ்ரீ பாஷ்யகாரரின் அநுக்ரஹத்தையும் பெற்றவர் என்று மஹான்கள் சொல்வது வழக்கம். இவர் அருளிச் செய்த க்ரந்தங்கள்:

  1. ஆநந்த தாரதம்ய கண்டனம் .2. ஜகன்மித்யாத்வ கண்டனம் .3. வேதாந்த தேசிக தண்டகம் .4. வேதாந்த தேசிகாஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம் .5. ஸித்தாந்த ரத்நாவளி .6. ஸித்தாந்த வைஜயந்தீ

.9. ஸுரபுரம் அண்ணய தாதாசார்ய: : ஸுரபுரம் வெங்கடாசார்யரின் வம்சத்தை சேர்ந்தவர். இவர் க்ரந்தங்கள் : .1. ஆசார்ய விம்சதி (ஸ்ரீ தேசிகன் விஷயம்) .2. ஆநந்த தாரதம்ய கண்டனம் .3. தத்வகுணாதர்ச: ஸவ்யாக்ய: .4. வ்யாவஹாரிக ஸத்யத்வ கண்டன ஸார .5. ரஸோதாரபாண .6. ஸ்ரீநிவாஸ ஸ்துதி .7. ந்ருஸிம்ஹ ஸ்துதி

.10. ஸுரபுரம் ஸ்ரீநிவாஸ தாதாசார்ய: சடமர்ஷண கோத்ரத்தில் ஸுரபுரம் வெங்கடாசார்யரின் வம்சத்தில் அவதரித்தவர். இவர் க்ரந்தங்கள் .1. அருணாதிகரண ஸரணி விவரணீ .2. ஆநந்ததாரதம்ய கண்டனம் .3. ஓங்காரவாதார்த்த : (நயமணிகலிகா) .4. ஜிக்ஞாஸாதர்பண : .5. க்ஞாநரத்ந ப்ரகாசிகா .6. ணத்வதர்பண .7. தத்வ மார்த்தாண்ட .8. ப்ரணவ தர்பண : .9. ப்ரதானப்ரதிதந்த்ர தர்பண : .10. நயத்யுமணி .11. புச்சப்ரஹ்மவாதநிராஸ .12. நயத்யுமணிதீபிகா .13. பேததர்பண : .14. விரோதநிரோத .(பாஷ்ய பாதுகா) .15. விரோதவருதிநீ ப்ரமாதிநீ .16. ஷஷ்டியர்த்த நிர்ணய : .17. ஸித்தாந்த சிந்தாமணி (உபாதாநத்வ ஸமர்த்தநம்) .18. தத்தரத்நப்ரதீபிகா .19. நீதிசதகம் .20. ஹரிகுணதர்பண

11. ஸுரபுரம் வெங்கடாசார்ய: சடமர்ஷண கோத்ரத்தில் அண்ணயாசார்யாரின் வம்சத்தில் அவதரித்தவர். இவர் க்ரந்தங்கள் : .1. அலங்கார கௌஸ்துப .2. க்ருஷ்ணபாவ சதகம் .3. கஜஸூத்ரவாதார்த்த .4. ப்ராமாண்யவாத கண்டனம் .5. ச்ருங்காரதரங்கிணீ

12புச்சி வெங்கடாசார்ய : ஸுரபுரம் ஸ்வாமிகளின் திருவம்சத்தைச் சேர்ந்தவர். இவர் க்ரந்தங்கள் .1. வேதாந்த காரிகாவளீ .2. விஷ்ணு ஸப்தவிபக்த்தி ஸ்தோத்ரம் .3. இந்த்வஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்.

13. ஸ்ரீநிவாஸாசார்ய: : கரூர் அக்ரஹாரத்தில் ஆண்டான் திருவம்சத்தில் அவதரித்தவர். இவர் க்ரந்தங்கள் .1. ஸஹஸ்ரகிரணீ .2. ணத்வதத்வ பரித்ராணம்.

14. வேதாந்தாசார்ய : ஸ்ரீவத்ஸ பரவஸ்து வேங்கட தேசிகனின் திருக்குமாரர். இவர் க்ரந்தங்கள் : .1. ஸித்தாந்த சந்திரிகா .2. ந்யாய ரத்நாவளீ .3. பாஞ்சகாலிகபத்ததி .4. வேதாந்த கௌஸ்துபம் ( ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயஸ்தர் எல்லாரும் அவச்யம் பாட்யக்ரந்த ரத்நம்.) .5. ராமாயண தாத்பர்ய நிர்ணயம் .6. மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம் . இந்த ஸ்வாமியின் க்ரந்தங்கள் அத்யத்புதமாயும் அபூர்வமான விஷய விசாரமும் மீமாம்ஸாந்யாய ஜடிலமாயும் அமைந்து இருக்கிறது. ஸ்ரீவைஷ்ணவ உலகம் இவருடைய க்ரந்தங்களை முத்ரணம் பண்ணினால் மதாந்தர கண்டனத்திற்காக யாரும் எழுத வேண்டிய ஆவச்யகமே இராது என்று தாஸனின் அபிப்ராயம்.

15. ஸ்ரீநிவாஸாசார்ய : பாரத்வாஜ கோத்ரத்தில் அவதரித்தவர். முதலில் தென்னாசார்ய ஸம்ப்ரதாயத்திலிருந்து பிறகு ஸ்ரீ தேசிக ஸம்ப்ரதாயத்தில் அந்வயித்து மஹான்களிடம் ஸம்பிரதாயார்த்தங்களைக் கேட்டவர். இவர் க்ரந்தங்கள் .1. ஸாரப்ரகாசிகா (ரஹஸ்யத்ரயவ்யாக்யா) .2. பரீக்ஷா (பாதுகாஸஹஸ்ரவ்யாக்யா) .3. ந்யாயஸார : (ந்யாயபரிசுத்திவ்யாக்யா) .4. ரஹஸ்யத்ரயஸாராதிகாரஸங்க்ரஹ : ஸ்ரீஸ்துதிவ்யாக்யா

16. ஸ்ரீநிவாஸ பரகால முனி : மைசூர் பரகால ஆஸ்தானாதிபதி. இவர் க்ரந்தங்கள் .1. துரூஹசிக்ஷா (தென்னாசார்ய ஸம்ப்ரதாய கண்டனம்) .2. ந்யாஸவித்யாப்ரகாச : .3. ஸுதர்சநதாரண நிர்ணய:

17. ஸ்ரீ கிருஷ்ண தாதாசார்ய : ( திருப்புட்குழி ஸ்வாமி) பெருமாள் கோவிலில் ஸுப்ரஸித்தராய், கோடி கந்யகாதானம் ஸ்ரீலக்ஷ்மீ குமாரதாத தேசிகன் திருவம்சத்தில் அவதரித்து பல மஹான்களுக்கு ஸம்ப்ரதாய ப்ரவசனம் செய்துகொண்டு தேவாதிராஜன் ஸந்நிதி நிர்வாஹம் முதலான கைங்கரியங்களையும் செய்து கொண்டு எழுந்தருளி இருந்தார். இவர் அருளிய க்ரந்தங்கள் .1. ரத்நபேடிகா (ந்யாய ஸித்தாஞ்சந வ்யாக்யா) .2. ப்ரஹ்மசப்தார்த்த விசார: .3. ணத்வசந்திரிகா .4. பரமுகசபேடிகா .5. துரர்த்ததூரிகரணம் .6. ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணம் .7. குவலயோல்லாஸ:(தர்க்க ஸங்க்ரஹவ்யாக்யா) .8. ஸந்ந்யாயதீபிகா (ந்யாயபரிசுத்தி வ்யாக்யா) 9. வேதாந்தபத்ரம் — விதவாவிவாஹ கண்டனம்

18. அநந்தாசார்ய : : இவர் க்ரந்தம் 1. தேசிக ஸித்தாந்த ரஹஸ்யம்.

19. ஸ்ரீவில்லி புத்தூர் ஸுந்தராசார்ய : நடாதூர் அம்மாள் திருவம்சத்தில் அவதரித்து நாவல்பாக்கம் அண்ணயதாததேசிகனிடம் வேதாந்தார்த்தங்களை ஸேவித்து, ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி இருந்தார். இவர் க்ரந்தங்கள் .!. அதிகரணஸாராவளீவ்யாக்யா .2. தத்வஸாரவ்யாக்யா .3. சில்லரை ரஹஸ்யம் ஸம்ஸ்கிருதீகரணம்

20. அப்பங் கொட்டாசார்ய : கந்தாடை வம்சியர். இவர் க்ரந்தங்கள் .1. ஸித்தாந்த ஸார .2. மாநவோல்லாஸ .3. தத்வ நிர்ணய .4. குத்ருஷ்டிபங்க .5. மாயிபங்க .6. தத்வாமிருதம் .7. விசிஷ்டாத்வைத நிர்ணய .8. தத்வநிஷ்கர்ஷ .9. ஸஜ்ஜநாமிருதம் .10. ரஹஸ்யத்ரய ஸாரார்த்த

21. ஆத்ரேய அஹோபிலாசார்ய : இவர் க்ரந்தம் ஸங்கல்ப ஸூர்யோதய வ்யாக்யா ப்ரபாவளீ

22. விக்ரஹம் தேசிகாசார்ய : வங்கீபுரம் பாரத்வாஜ கோத்திரத்தில் அவதரித்தவர் . நாவல்பாக்கம் அண்ணயதாத தேசிகனின் ஜாமாதா. தன் மாமனாரான அண்ணயதாத தேசிகனிடமே ஸர்வசாஸ்த்ரங்களையும் வேதாந்த க்ரந்தங்களையும் அதிகரித்தவர். இவர் அருளிச் செய்த க்ரந்தங்கள் .1. நாதமுனி விஜயம். .2. ப்ரஹ்மஸூத்ர பாஷ்ய டிப்பணம். .3. அஸ்தி ப்ரம்மேதி ச்ருத்யர்த்த விசார: .4. வ்யுத்பத்திவாதக்ரோட பத்திரம் .5. ஜயந்தீ நிர்ணயம் .6. க்ருத்திகா தீபாராதன நிர்ணயம் .7. அண்ணயதாத தேசிகன் மங்களம் .8. ப்ரபத்தி .9. அண்ணயதாத தேசிகன் தண்டகம். .10. தர்கஸங்கிரஹவ்யாக்யா

23. வாதூல நாராயணாசார்ய : ஸங்கல்பஸூர்யோதயவ்யாக்யா

24. வீரராகவ சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் : பிள்ளைப்பாக்கம் ஸ்வாமி. ஸ்ரீ அஹோபில ஆஸ்தாநாதிபதி. இவர் அருளிச்செய்த க்ரந்தங்கள் .1. ஸ்தேமதர்பணம் .2. வாத தரங்கிணீ .3. வைபவ சந்திரிகா .4. சாரீரக ஸுப்ரபாதம் .5. மஹார்த்தரக்ஷா .6. ஆதேசமணி .7. தத்வ்யாக்யா

25. பாட்ராசார்ய : (வெங்கடாசார்ய) தஞ்சை மாநகரில் வாழ்ந்துவந்த ரகுநாத நாயகமஹாராஜாவின் ஆசார்யனும் திருமலை சதுர்வேதசதக்ரது நாவல்பாக்கம் அய்யா குமாரதாத தேசிகனின் திருக்குமாரரும் ஆவார். தன் பிதாவிடம் ஸர்வசாஸ்த்ரார்த்தத்தையும் அதிகரித்த மஹான். இவர் அருளிச்செய்த க்ரந்தங்கள் : .1. சரணாகதி தோரணீ .2. ஆசார்ய குணாதர்ச (தேசிகாஷ்டோத்தர சதநாம வ்யாக்யா) .3. கோகில ஸந்தேசம் .4. ரகுநந்தவிலாஸ மஹாகாவ்யம் .5. மித்யாத்வாநுமாந கண்டனம் .6. ப்ராமாண்யவாத கண்டனம்

26. ப்ரதிவாதி பயங்கரம் வெங்கடாசார்யர் : இவர் க்ரந்தங்கள் : .1. சாரீர சுப்ரதீபிகா .2. பக்தவைபவ தீபிகா .3. பகவதாராதனகாரிகா .4. ராமாநுஜநக்ஷத்ரமாலிகா .5. வேதாந்த தேசிக சதகம் .6. துஷ்டசிக்ஷா .7. த்ராவிடாம்நாய சதகம்.

27. ஸ்ரீநிவாஸாசார்ய : ஆண்டான் வம்சத்தில் அவதரித்தவர். கரூர் அக்ரஹாரத்தில் நித்யவாஸமாய் இருந்த மஹான். இவர் அருளிச் செய்த க்ரந்தம் .1. வசநபூஷண மீமாம்ஸா விசஸநம் ( ந்யாஸவித்யா விஜயம்.)

28. ஸ்ரீநிவாஸ சடகோப யதி : ந்யாய பரிசுத்தி வ்யாக்யா நிகஷா.

29. சடகோப ராமாநுஜ யதீந்த்ர மஹாதேசிகன் : அஹோபில மடாஸ்தாநத்தில் 34ம் பட்டத்தில் எழுந்தருளி இருந்தவர். அத்திப்பட்டு ஸ்வாமி என்று வ்யாவஹாரம். இவர் அருளிச் செய்த க்ரந்தங்கள்: .1. அதிகரண கல்பதரு (அதிகரணஸாராவளி வ்யாக்யா) .2. ந்யாஸவிம்சதி வ்யாக்யா .3. ஸாமாந்ய விசேஷாதி நியாய ஸங்க்ரஹ .4. கவி ஹ்ருதயரஞ்ஜிநீ .5. ஜகசாஸ்த்ரீய ஸமர்த்தநம் .6. ஆநந்த்ய நிர்ணயம் .7. ப்ரஹ்ம ஸூத்ரார்த்த மஞ்சரீ .8. மணிப்ரவாள கீதா வ்யாக்யாநம் தேவராஜ ஸஹஸ்ரம்.

30, பராங்குச யதி : அஹோபில மடாஸ்தாநத்தில் எழுந்தருளி இருந்த ஸ்வாமி. இவர் அருளிச் செய்த க்ரந்தங்கள் .1. ஸித்தாந்த மணிதீபம் .2. பஞ்சகால தீபிகை ப்ரபத்தி ப்ரயோகம் முதலியன.

…..தொடரும்………

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here