Yesterday January 15th 2014, during Day 5 of Thiruadyaya utsavam at Thirukkannamangai Divya Desam, special Thirumanjanam was performed at 6:30 pm for Sri Bakthavathsala Perumal followed by purappadu through 3rd prakaram and madriyadhai to Azhwar. Around 9 pm perumal had purappadu in Kudurai vahanam for Parvettai in the mada streets.
January 15th 2014 – திருஅத்யயன உத்ஸவத்தில் 5ம் நாள் காலை விசேஷ திருமஞ்சனமும் மாலை 6.30 மணிக்கு திருஅத்யயன உத்ஸவதின் 5ம் நாள் புறப்பாடு பரமபத வாசல் வழியே 3வது ப்ரகாரத்தில் விசேஷமாக நடந்து ஆழ்வார் மர்யாதை ஆகி, இரவு 9.30 மணி சுமாருக்கு குதிரை வாகனத்தில் “பாரிவேட்டை” புறப்பாடு திருவீதியில் நடந்து வடக்கு ரத வீதியில் வேடுபரி ஓட்டமும் நடந்தது. பாரிவேட்டையின்போது ஸ்ரீ பெருமாளின் திருவாபரணங்கள் திருமங்கை மன்னனால் கள்வாடப்பட்டு பின் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐதீகத்தில் களவுபோன ஆபரணங்களின் ஜாப்தா ஸ்ரீ பெருமாள், ஆழ்வார், திருக்கோயில் அதிகாரி மற்றும் உபயதார் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Photography by Sri Rajagopalan TSR