On 23 March 2014, Vijaya varusha Panguni Kettai; Pancha Garuda Sevai took place in grand manner at Aminjikarai Sri Prasanna Varadharaja Perumal Temple. On behalf of this utsavam, Special Thirumanjanam was performned for five Emperumans , Sri Prasanna Varadhar, Sri Ranganathar, Sri Srinivasar, Sri Ramar, Sri Krishnan also with Poigaiazhwar, Boothathazhwar, Peyazhwar three Mudhal azhwars in the temple.Later in the everning Five Emperuman gave darshan from Garuda vahanam and gave darshan to Mudhal Azhwars. Lot of astikas took part in the Pancha garuda sevai and had the blessings of Divya dampatis.
அமைந்தகரை-ஸ்ரீ பிரசன்ன வரதர் திருக்கோயிலில் நேற்றிரவு (23.03.14) நடைபெற்ற ஐந்து கருட சேவை உத்சவத்தின் தொகுப்பு.
ஸ்ரீ பிரசன்ன வரதர், ஸ்ரீ ரங்க நாதர், ஸ்ரீ ஸ்ரீனிவாசர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய ஐந்து எம்பெருமான்களும் கருடன் மீது ஆரோகணித்து, மூவர்களான ஸ்ரீ பொய்கையாழ்வார், ஸ்ரீ பூதத்தாழ் வார், ஸ்ரீ பேயாழ்வார் எனும் முதலாழ்வார்களுக்கு தரிசனம் தந்த வைபவம் கண்கொள்ளா விருந்து. அத்யாபக சுவாமிகள் பிரபந்தம் சேவித்துக்கொண்டு முன்னே செல்ல, பந்த சேவை பஜனை கோஷ்டி பின்னே வர, விசேஷ நாதஸ்வர தவில் வித்வான்கள் அருமையான இசை வழங்க, மிகச்சிறப்பான திருவீதி புறப்பாடு நடைபெற்றது. ஏராளாமான பக்த ஜனங்கள் கலந்து கொண்டு உத்சவத்தினைக்கண்டு களித்தனர்.
ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ பேரருளாளன் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்க நாதர் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாசர் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ சீதா, லக்ஷ்மன சமேத ஸ்ரீ கோதண்ட ராமர் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீ வேணு கோபாலன் திருவடிகளே சரணம்!
ஆண்டாள், ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்!
ஆச்சார்யர்கள் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்!
சமஸ்த பாகவதோத்தமர்கள் திருவடிகளே சரணம்!
சமஸ்த பரிவாராய, சர்வ மங்களரூபாய ஸ்ரீமதே நாராயணாய நம:
These are some of the photos taken during the Garuda sevai…
Writeup & Photography : Sri Venkatraman Jaganathan & Sri Kooram Kidambi Varadharajan