

இன்று 28.10.2014 ஐப்பசி மூலம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநக்ஷத்ரத்தை முன்னிட்டு காலை சுமார் 11 மணிக்கு ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ மணவாள மாமுனி ஆகியோருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பின் ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேகவல்லித் தாயார் சந்நிதிகளில் மங்களாசாசனம் ஆகி திருப்பாவை சாற்றுமுறை நடைபெற்றது.
இரவு 8.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடு ஆகி உள் ப்ரகாரத்தில் வலம் வந்து ஸ்ரீ மணவாள மாமுனிகள் சந்நிதிக்கு எழுந்தருளி, நித்யானுசந்தான கோஷ்டி ஆகி பின் பெரிய சாற்றுமுறை நடைபெற்று, சந்நிதி மர்யாதை ஆகி பனி முக்காட்டு சேவையுடன் ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார். ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருநக்ஷத்ர உத்ஸவம் இனிதே முடிவுற்றது.
The following are some of the photos taken during the occasion…
Writeup & Photography : Sri Rajagopalan TSR