108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ பஞ்ச க்ருஷ்ண க்ஷேத்ரங்களில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் தை மாதம் (அனுஷ நக்ஷத்ரம்) 2ந் தேதி 16.01.2015 வெள்ளிக்கிழமை “கனுப் பொங்கலை” முன்னிட்டு காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார். வடக்கு மாட வீதியில் “வேடு பறி” உத்ஸவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ பெருமாளின் திருவாபரணங்கள் திருமங்கை மன்னனால் களவாடப்பட்டு பின் கண்டுபிடிக்கப்பட்ட்தாக “களவு போன திருவாபரணங்களின் ஜாப்தா” வாசிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்
The following are some of the photos taken during the occasion…
Photography : Sri Dr Rajagopalan TSR