June 17th 2015 , Srirangam
ஸ்ரீமத் அழகியசிங்கர் திருநட்சத்திரத்தை முன்னிட்டு (June 22nd 2015) – 1300 வேத விற்பன்னர்கள் நாடு முழுவதிலிருந்தும் வரவழைக்கப்பட்டு, ரிக், யஜுர், கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர், சாமம் வேத விற்பன்னர்கள் தனித்தனி பகுதிகளாக அரங்கம் முழுவதும் அமர்த்தப்பட்டு, தினமும் மூன்று காலமும் வேத கோஷம் புரிந்தனர்.
காலை 6.30 மணிக்கு தொடங்கி, ஸ்ரீமத் அழகியசிங்கர் அரங்க மேடைக்கு எழுந்தருளி ஸ்ரீ மாலோலனுக்கு, விஸ்வரூப சேவை ஆனவுடன், நித்ய ஆராதனம் கண்டருளினார். அதன்பின் தீர்த்தம் வழங்கப்பட்டு, ஸ்ரீமத் அழகியசிங்கர் திருக்கரங்களால் சடாரி சமர்பிக்கப்பட்டு, திவ்ய தேச மாலை மரியாதை ஸ்ரீமத் அழகியசிங்கருக்கு சாற்றப்பட்டது. அணைத்து வேத வித்வான்களும், ரிக், யஜுர், கிருஷ்ண யஜுர், ஸாமம், முதலிய வேத கானம் வரிசையாக அருளினர். அதன் தொடர்ச்சியாக பிரபந்த சாற்றுமுறை ஆகிற்று. மஹான்கள், ஸ்ரீமத் அழகியசிங்கர் பற்றியும் ஸ்வாமிக்கு வேதங்களின் மீதுள்ள பற்றினையும் மிகவும் சிலாகித்து சாதித்தாயிற்று. அபிகமனம் ஆனவுடன், வேத பாராயண கோஷ்டி மீண்டும் தொடங்கப்பட்டது. ஸ்ரீமத் அழகியசிங்கர் அணைத்து வேத பிரிவு கோஷ்டியியின் பாராயணங்களையும் தனித்தனியாக மிகவும் ரசித்து செவி மடுத்தாயிற்று