ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்திரமான/ ஸ்ரீ கிருஷ்ண அவதாரமான திருக்கண்ணமங்கை திவ்ய தேஸத்தில் நேற்று செப்டம்பர் 05, 2015 சனிக்கிழமை ஸ்ரீஜயந்தியை முன்னிட்டு, ஸ்ரீ கிருஷ்ண அவதார உத்ஸவமும், செப்டம்பர் 06, 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை உரியடி உத்ஸவமும் நடைபெற்றது. 05.09.2015 மாலை ஸ்ரீ சந்தான க்ருஷ்ணன், ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ கிருஷ்ணருக்கு விசேஷ திருமஞ்சனமும், இன்று காலை 11 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்து இரவு சுமார் 7 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் உரியடி புறப்பாடு நடந்தது.
அது சமயம் பெருமாளின் Representative ஆக யாதவ குல வம்சத்தாரால் (பரம்பரையாக)உரி அடிக்கப்பட்டு உரியடி உத்ஸவம் நடைபெற்றது. உரியடி முடிந்து ஸ்ரீ பக்தவத்ஸலன் திருவீதி புறப்பாடு கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் கண்டு களித்து எல்லாம் வல்ல ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
The following are some of the photos taken during the occasion…
Writeup & Photography : Sri Dr Rajagopalan TSR