Renovation Appeal – Eramalur Sri Sundharavaradha Lakshminarayana Perumal Sannithi

0
1,695 views

Eramalur Sri Sundharavaradha Lakshminarayana Perumal Sannithi

Sri Sundharavaradha Lakshminarayana Perumal Sannithi (Eramalur Village. Vandavasi Taluk, Thiruvannamalai Dt), built by Moondram Nandhivarma pallavan during the 8th century. This century old temple, was then taken care by the srivaishnavas who had migrated from Srirangam. The temple remains closed to near a century with no proper care taker. Having heard about the despair state of this temple, some Srivaishnavas have decided to build a new temple complex adjacent to the existing sannithi.

We hereby request the interested devotees to come forward to contribute in the construction of the temple. Please send your contributions to the below account:

Eramalur Sri Sundharavaradha Lakshminarayana Perumal Sannithi Kainkarya Trust (ESSLPSKT)
Account number: 378405001380
IFSC code – ICIC0003784

ICICI Bank, Vandavasi Branch.

Kindly share the details of the contribution to us. Balaji – 9840578398 and Shrikanth – 9994783677

ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மீநாராயண பெருமாள் ஸன்னிதி புனருத்தாரண கைங்கர்ய விண்ணப்பம். எரமலூர் கிராமம், வந்தவாசி வட்டம். திருவண்ணாமலை மாவட்டம்.

ஆஸ்திக அன்பர்களின் கவனத்திற்கு,

பக்தவத்ஸலனான எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் ஆச்ரிதர்களான நம் அனைவரையும் ரக்ஷிக்க வேண்டி இப்பூவுலகில் பல திவ்ய தேசங்களிலும், அபிமான க்ஷேத்ரங்களிலும் மற்றும் பல ஸ்ரீக்ராமங்களிலும் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ளபடி. அங்ஙனம் தொண்டை மண்டலமான காஞ்சிக்கு தெற்கே வந்தவாசி வட்டத்தில் புகழ்பெற்ற நல்லூர், நாவல்பாக்கம், தெய்யார் ஆகிய ஸ்ரீக்ராமங்களுக்கு அருகில் முன்பொரு காலத்தில் இளமானூர் என்று போற்றப்பட்ட இன்றைய எரமலூர் ஸ்ரீக்ராமத்தில் ஸ்ரீசுந்தவரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மீநாராயண பெருமாளாக கோவில் கொண்டு ஸேவை ஸாதித்து வருகிறபடி. மேற்படி ஸன்னிதியானது கி.பி.9ஆம் நூற்றாண்டில் மூன்றாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது என்பது கர்ண பரம்பரை செய்தியாகும். பல தலைமுறைகளுக்கு முன்பு ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீவைஷ்ணவர்கள் இந்த ஸ்ரீக்ராமத்தில் குடியேறி பெருமாளை ஆராதித்து வந்ததாக அவ்வூர் பெரியோர்கள் கூறுகின்றனர். எனினும் கலியின் தோஷத்தால் அவ்வூரைச் சேர்ந்த பல ஸ்ரீவைஷ்ணவர்களும் நகரங்களை நோக்கிச் சென்றுவிட இந்த ஸன்னிதியானது நித்ய ஆராதனங்களும் உத்ஸவாதிகளும் நின்று மிகவும் சிதிலமடைந்துவிட்டது.

இந்த ஸன்னிதியின் தற்போதைய நிலையைக் கண்டு வருத்தமுற்ற அவ்வூரைச் சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் சிலரும் ஊர் பொதுமக்களும் சேர்ந்து புனருத்தாரண பணிகளைத் தொடங்கி பழையபடி நித்ய திருவாராதனங்கள் நடக்க ஏற்பாடு செய்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ‘எரமலூர் ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மீநாராயண பெருமாள் ஸன்னிதி கைங்கர்ய ட்ரஸ்ட்’ என்னும் அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளனர்.
மேற்படி புனருத்தாரண திருப்பணிகள் 23.11.2016 புதன்கிழமையன்று பாலாலயம் மற்றும் வாஸ்து ஹோமத்துடன் தொடங்கியுள்ளது. ஆஸ்திகர்கள் இந்த கைங்கர்யத்தில் நேரடியாக கலந்துகொள்ளும் விதமாக புனருத்தாரண திருப்பணிகளின் மொத்த விவரமும் இந்த விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. த்ரவ்ய ஸஹாயம் (பொருளுதவி) செய்ய விரும்புவோர் கீழ்கண்ட வங்கிக் கணக்கில் யதாசக்தி என்ற அளவில் தம்மால் இயன்றதை செலுத்தி ஸ்ரீசுந்தரவரத லக்ஷ்மீநாராயண பெருமாளின் க்ருபா கடாக்ஷத்திற்கு பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்.

வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியவர்கள் தங்களுடைய விவரங்களை அடியோங்களுக்கு தெரியபடுத்த வேண்டுகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் எஸ்.எம்.எஸ்(SMS) /வாட்ஸப்(WhatsApp) மூலமாகவோ அல்லது மின்னஞ்சல்(E-Mail) மூலமாகவோ அந்த தகவல்களைத் தெரிவிக்கலாம். இரசீது அனுப்பவேன்டிய முகவரியையும் குறிப்பிட வேண்டுகிறோம்.

இங்ஙனம்,
எரமலூர் ஸ்ரீசுந்தரவரத லஷ்மீநாராயண பெருமாள் ஸன்னிதி கைங்கர்ய ட்ரஸ்ட்.
ஸ்ரீ பாலாஜி – 9840578398 ஸ்ரீகாந்த் – 9994783677 (whatsapp)
shrikainkaryam@gmail.com

Bank Account details:
Eramalur Sri Sundharavaradha Lakshminarayana Perumal Sannithi Kainkarya Trust (ESSLPSKT)
Account number: 378405001380
IFSC code – ICIC0003784

ICICI Bank, Vandavasi Branch.

18581986_793328710824474_7648839524689010758_n

18491710_793329007491111_2034658026992348726_o

18527100_793329097491102_4930220811161134872_o

18558835_793329557491056_5621521453445012884_o

18489709_793330374157641_5979735029208159536_o

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here