பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி
ஆவியே!அமுதே!எனநினைந்துருகி– 1.1.2
அவரவர் பணை முலை துணையா
பாவியேனுணராதெத்தனை பகலும்
பழுது போயொழிந்தன நாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்ய நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்
ஆவியே என | ‘எனக்கு உயிர் போன்றவளே!‘ என்றும் |
அமுதே என | எனக்கு அம்ருதம் போல் இனியவளே!’ என்றும் இப்படிப் பலவாறாகச் சொல்லி வாய் பிதற்றிக்கொண்டு) |
நினைந்து உருகி | சிற்றின்பங்களை நினைத்து நினைத்து மனமுருகி |
அவர் அவர் | பலபல பெண்டுகளுடைய |
பணைமுலை | பருத்த முலைகளையே |
துணை ஆ | ரக்ஷகமாகக்கொண்டு |
பாவியேன் | பாபியான நான் |
உணராது | ஸ்வரூபஜ்ஞானம் பெறாததன் பயனாக |
எத்தனை பகலும் பழுது போய் ஒழிந்தன | ஐயோ! எத்தனை காலம் வீணாகக் கழிந்தன; |
எத்தனை நாள்கள் பழுது போய் ஒழிந்தன | அந்தோ எத்தனை நாள்கள் பாழாய்க் கழிந்தன! |
(காலமெல்லாம் பாழாகப் போயிற்றே!), | |
தூவிசேர் அன்னம் | இறகுகளையுடைய அன்னப்பறவைகள் |
துணையொடும் புணரும் | பேடையோடு புணருமிடமாய் |
புனல் சூழ் | நீர்நிலங்கள் சூழ்ந்ததான |
குடந்தையே | திருக்குடந்தையையே |
தொழுது | ஸேவித்து |
உய்ய | உஜ்ஜீவிக்கும்படியாக |
நாராயணா என்னும் நாமம் என்நாவினால் நான் கண்டு கொண்டேன் | திருவஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்தை எனது நாவிலே உரைத்துக் கொள்ளப் பெற்றேன். |
English Translation
“My life!”, “My nectar!”, I fondly called them, and sought their round-breast for comfort. Sinner, this self O!, how many days passed, wastefully spent in this manner. Pure-water-swan-pair, nestling together, in holy town of Kudandai, – I offered worship, chanting the Mantra, Narayana is the good name.
Source: