Sriman Madhurakavi Swami 110th year thiruaadhyayana utsavam took place at srirangam in grand manner. The utsavam took place for 2 days 16 & 17th October 2014 at his thiruvarasu in Sriman Madhurakavi Nandavanam, On 16th October 2014 goshti starts (thodakkam) around 1.00 p.m, thirumanjanam was performed to Sriman Madhurakavi Brindavanam and goshti concludes on 17th october 2014 in grand manner with theertha prasadam. Those who do pushpa kaingaryam in this brindavanam are Brahmacharis. Several Bhaagavathas took part in the utsavam and had the blessings of Sriman Madhurakavi Swami.
ஸ்ரீமான் மதுரகவி சுவாமி 110 ம் வருட திருஅத்யயன மகோத்சவம்.
ஸ்ரீ சுவாமி அவதரித்தது 1846 பூர நட்சத்திரம். ஸ்ரீ சுவாமி பரமபதித்தது 1904 நம்பெருமாள் ஊஞ்சல் 7 ம் திருநாள் அன்று கோஷ்டிகளுக்கு தீர்த்தம் விநியோகம் ஆனபின்பு இரவு 11.௦௦ மணிக்கு பரமபதித்தார்.
சுவாமியின் முக்கிய கைங்கர்யங்கள்:
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதரின் ப்ரணவாகார விமானத்தை ஹைதராபாத் வரை சென்று எண்பதாயிரம் ருபாய் வரை வசூல் செய்து 12 கலசங்களுக்கும், பத்மத்திற்கும் தங்க தகடு பதித்தது.1903 ம் வருடம் ஏப்ரல் மாதம் ரூ.20,௦௦௦ /- செலவில் சம்ரோக்ஷனம் சுவாமியால் செய்விக்கப்பட்டது.தனது பூர்விக சொத்தை முழுமையாக நந்தவனத்திற்கு தந்து பிறபாகவாதர்களுடைய உதவியுடன் நந்தவனத்தைச்சுற்றி உள்ள நிலங்களை வாங்கி சேர்த்து ஒரு டிரஸ்ட் நிறுவி இன்று வரை நடந்து வருகிறது.
இந்த நந்தவனத்திலிருந்து ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ ரங்கநாச்சியார், உபயநாச்சியார்கள், உற்சவர்களுக்கு தினசரி திருமாலை கட்டி சமர்ப்பிக்கபடுகிறது. ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் சேவார்த்திகள் தரும் மாலை தாயாருக்கும், பெருமாளுக்கும் சாற்ற முடியாது. இது மற்ற திவ்ய தேசத்தில் இல்லாத சிறப்பம்சமாகும்.ஸ்ரீ ரெங்கனை “ஆபரணத்திற்கு அழகு செய்யும் பெருமாள்” என்று சொல்வார்கள். அந்த ஸ்ரீ ரெங்கனையே அழகு செய்வது எங்களது நந்தவன மாலைகள் தான். இந்த சாஸ்வதமான கைங்கர்யம் சுமார் 150 ஆண்டுகளாக தடங்கலின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மதியம் பெரிய அவசரம் எனப்படும் பெருமாள், தாயார் பிரசாதத்திற்கு தினமும் ஊறுகாய் இந்த நந்தவனம் மூலம் இன்று வரை சமர்பிக்கப்படுகிறது.
வருடந்தோறும் சுவாமி பரமபதித்த நாளான ஊஞ்சல் 7ம் திருநாளில் கருட மண்டபத்திலிருந்து ஊஞ்சல் மண்டபம் வரை புஷ்ப பந்தல் அலங்காரம் நந்தவனம் மூலமாக நடைபெற்றுகொண்டிருகிறது. அன்றைய நாளில் நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் நந்தவனத்திலிருந்து விசேஷமாக தொடுக்கப்பட்ட கனமான பெரிய மாலை அலங்காரத்துடன் நெல் அளவை உத்சவத்திர்காக எழுந்தருள்வார்.சுவாமி தன்னுடைய 17 வது வயதில் விவாக செலவுக்காக பெற்றோர்களால் கொடுக்கப்பட்ட ரூ.200/- 10 பவுன் தங்க கடலைக்காய் மணிமாலை செய்து தாயாருக்கு சாற்றினார்.
மகாவிரக்தராய் பிரமச்சாரியாக நம்பெருமாளுக்காகவே தன் வாழ்நாளை முழுமையாக ஈடுபடுத்திகொண்டார்.
ஸ்ரீ வானமாமலை ஜீயர் சுவாமிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்துக்கொண்டு, ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியர் சன்னதி சாமி அய்யங்கார் சுவாமியிடம் நாலாயிர திவ்யப்ரபந்தம், ரகசிய கிரந்த காலக்ஷேபம் உபதேசம் பெற்றார்.இன்றும் சுவாமியினுடைய திருவரசுக்கு வந்து அவரை பிரார்த்தனைசெய்தால் அவர்கள் வேண்டுவது நிறைவேறுகிறது. தன் ஆயுள் முழுவதும் பெருமாளுக்கு அழகு சேர்ப்பதையே நினைத்து செயல்பட்டதால் இன்றும் அவருடைய திருவரசை வணங்கியவர்கள் வாழ்க்கையும் ப்ராகாசமாக விளங்குகிறது. இங்கு கைங்கர்யம் செய்யும் சுவாமிகள் (திருமணமாகாத பிரமச்சாரிகள்) தினமும் அதிகாலையில் புஷ்பங்களை பறித்து தேவையான மாலைகளை நேர்த்தியானமுறையில் தொடுத்து சமயமறிந்து தாமதம் தடைகள் இல்லாமல் சமர்ப்பித்து வருகின்றனர். உற்சவ காலங்களில் அதிகப்படியான மாலைகளை தொடுப்பதற்கு சுவாமிகள் தங்கள் லௌகீக தொடர்புகளை கூட (office/college) விடுப்பு எடுத்துக்கொண்டு முழுமையாக பக்தியுடன் ஸ்ரீ மதுரகவிசுவாமிகள் அனுக்ரஹம் மட்டுமே பயனாக கருதி ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
The following are some of the photos taken during the Occasion.