குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,
அடைந்த தென் குருகூர்ச்சட கோபன்,
மிடைந்த சொல்தொடை யாயிரத்திப்பத்து,
உடைந்து நோய்களை யோடு விக்குமே.
Meaning:
This decad of the thousand sweet songs by kurugur satakopan, on attaining the Lord who wears the nectared Tulasi wreath humming with bees, provided a cure for sickness and disease.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
இத்திருவாய்மொழிதானே இது கற்றவர்களினுடைய ப்ராப்தி ப்ரதி பந்தகங்களை வேரறுக்குமென்று பலன்சொல்லித் தலைக்கட்டுகிறது. மதுவைப் பருக வேணுமென்று இழிந்த வண்டுகளானவை பெருக்கடலிலே விழிந்தாற்போலே உள்ளேயுள்ள இடங்கொண்டு புஜிக்கும்படியாக மதுவெள்ளம் நிறைந்த திருத்துழாய்மாலையையணிந்த திருவபிஷேகத்தையுடையனான எம்பெருமானைபடி பணிந்த நம்மாழ்வார் அருளிச்செய்த சொற்பொழிவு வாய்ந்த இத்திருவாய்மொழிதானே நோய்களை உடைந்தோடும்படிபண்ணும் என்றதாயிற்று.