Paaraayanam at Swami Desikan Thirumaaligai in Srirangam

0
597 views
Astikas are invited at Swami Desikan Thirumaaligia in Srirangam to recite Swami Desikan’s Srisooktis. Here is a writeup by Sri Raaghava Nrusimha dhaasan about this:
மேற்கண்ட திருமாளிகையில் நம் ஆசார்ய ஸார்வபௌமரான சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான் தம்முடைய விபவ காலத்தில் நாற்பத்திரண்டு வருஷங்கள் எழுந்தருளியிருந்து பாரொன்றச் சொன்ன பழமொழிகளான ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் முதலிய பல ஸத் க்ரந்தங்களை அருளிச் செய்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

இத் திருமாளிகையில் இப்பவும் “அதிதி ஸத்காரம்” என்ற பெயரில் ஸ்ரீரங்கத்திற்கு வரும் யாத்ரிகர்களுக்கு 24 மணி நேரமும் இலவச ஆகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இராமாநுசமுனி இன்னுரை சேரும் தூப்புல் புனிதரான ஸ்வாமி ஸ்ரீ வேதாந்த தேசிகன், வானேறப் போமளவும் வாழ்வளிக்க வல்ல க்ரந்தங்களை அருளிய  இத் திருமாளிகையில்,  வித்வான். கூத்தப்பாக்கம். ஸ்ரீ.உ.வே. தேசிகாச்சார்யார் ஸ்வாமி, விபஸ்சிந்மணி . நாவல்பாக்கம்.ஸ்ரீ.உ.வே. Dr. வாஸுதேவாச்சார்யார் ஸ்வாமி, வித்வான். வாட்டாறு. ஸ்ரீ.உ.வே. ரங்கநாதாச்சார்யார் ஸ்வாமி, ஆகியோரின் ஆலோசனைப்படி ஸ்வாமி ஸ்ரீ தேசிகனின் 120 மூல க்ரந்தங்களையும் பாராயணம் செய்வதற்கு ஸ்ரீவைஷ்ணவ வித்வான்கள், லௌகிக ஆஸ்திகர்கள், பாகவதர்கள் (ஸ்த்ரீகள், புருஷர்கள் இருபாலரும்) என அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

ஸ்ரீதேசிகப் பிரபந்தம் மற்றும் ஸ்ரீ தேசிக ஸ்தோத்ரங்களைப் பாராயணம் செய்யத் தமிழ் நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்களும், இதர க்ரந்தங்களைப் பாராயணம் செய்ய ஸம்ஸ்க்ருதம் நன்றாக வாசிக்கத் தெரிந்தவர்களும்  அன்போடு அழைக்கப்படுகிறார்கள்.  அவ்வப்போது ஸ்ரீரங்கத்திற்கு வருகை தரும் ஆஸ்திக அன்பர்களில், தங்களுடைய ஓய்வு நேரத்தில் ஸ்ரீ தேசிகன் திருமாளிகைக்கு வந்து குறைந்தது அரை மணி நேரமாவது மூல க்ரந்த பாராயணம் செய்ய விருப்பம் உள்ளவர்களை வரவேற்கிறோம். ஸ்ரீ தேசிக மூல
க்ரந்தங்களைப் பாராயணம் செய்வதற்காக வெளியூரில் இருந்து வரும் ஆஸ்திகர்களுக்கு கிஞ்சித் ஸம்பாவனையும் , சாற்றுமுறையுடன் க்ரந்தங்களைப் பூர்த்தி செய்பவர்களுக்கு ஸம்பாவனையாக ரூ. 2000, ரூ. 1000, ரூ. 500 என்ற வகையில் அளித்து கௌரவிக்கப்படுவதோடு திருமாளிகையிலேயே தங்குவதற்கும் ஆகார வசதி செய்து வைக்கப்படும்.

ஸ்ரீ மந் நிகமாந்த மஹாதேசிகனின் மூல க்ரந்தங்களைப் பாராயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
கூரம். ஸ்ரீ.உ.வே. சேஷாத்ரி ஐயங்கார் ஸ்வாமி,
அதிதி ஸத்காரம்,
ஸ்ரீமத் ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருமாளிகை,
எண்.116, வடக்கு உத்தர வீதி,
ஸ்ரீரங்கம், திருச்சி -620 006.
கைபேசி எண் : 0 – 9940 294 908.
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here