Swami Desikan Adaikalapatthu Upanyasam at Sri Sannidhi Triplicane

0
1,706 views

adaika

Swami Desikan’s Adaikalapatthu Upanyasam will be delivered by U.Ve.Mannargudi Rajagopala swamin on the 1st of August 2013 at Sri Sannidhi Triplicane. All are welcome to attend the Upanyasam of Mannargudi Swami on Adaikalapathu to understand more on Saranagathi thathvam said by Swami Desikan in Adaikalapathu Prabandham.

adaikalapathu upanyasam

பத்தி முதலாமவற்றுள் பதி எனக்கு கூடாமல்
எத்திசையும் ஒழன்றோடி இளைத்துவிழும் காகம்போல்
முத்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே.

சடைமுடியன் சதுமுகனென் றிவர்முதலாந் தரமெல்லா
மடையவினைப் பயனாகி யழிந்துவிடும் படிகண்டு
கடிமலராள் பிரியாத கச்சிநக ரத்திகிரி
யிடமுடைய வருளாள ரிணையடிக ளடைந்தேனே.

தந்திரங்கள் வேறின்றித் தமதுவழி யழியாது
மந்திரங்க டம்மாலு மற்றுமுள வுரையாலு
மந்தரங்கண் டடிபணிவா ரனைவர்க்கு மருள்புரியுஞ்
சிந்துரவெற் பிறையவனார் சீலமல தறியேனே.

காகமிரக் கதன்மன்னர் காதலிகத் திரபந்து
நாகமர னயன்முதலா நாகநக ரார்தமக்கும்
போகமுயர் வீடுபெறப் பொன்னருள்செய் தமைகண்டு
நாகமலை நாயகனார் நல்லடிப்போது அடைந்தேனே.

உகக்குமவை யுகந்துகவா வனைத்துமொழிந் துறவுகுண
மிகத்துணிவு பெறவுணர்ந்து வியங்காவ லெனவரித்துச்
சகத்திலொரு புகலிலாத் தவமறியேன் மதிட்கச்சி
நகர்கருணை நாதனைநல் லடைக்கலமா யடைந்டேனே.

அளவுடையா ரடைந்தார்க்கு மதனுரையே கொண்டவர்க்கும்
வளவுரைதந் தவனருளே மன்னியமா தவத்தோர்க்குங்
களவொழிவா ரெமரென்ன விசைந்தவர்க்குங் காவலராந்
துளவமுடி யருள்வரதர் துவக்கிலெனை வைத்தேனே.

உமதடிக ளடைகின்றே ண்னென்றொருகா லுரைத்தவரை
யமையுமினி யென்பவர்போ லஞ்சலெனக் கரம்வைத்துந்
தமதனைத்து மவர்தமக்கு வழங்கியுந்தா மிகவிளங்கு
மமைவுடைய வருளாள ரடியிணையை யடைந்தேனே.

திண்மைகுறை யாமைக்கு நிறைகைக்குந் திஇவினையா
லுண்மைமற வாமைக்கு முளமதியி லுகக்கைக்குந்
தண்மைகழி யாமைக்குந் தரிக்கைக்குந் தணிகைக்கும்
வண்மையுடை யருளாளர் வாசகங்கள் மறவேனே.

சுரிதிநினை விவையறியுந் துணிவுடையார் தூமொழிகள்
பரிதிமதி யாசிரியர் பாசுரஞ்சேர்ந் தருக்கணங்கள்
கருதியொரு தெளிவாளாற் கலக்கமறுத் தத்திகிரிப்
பரிதிமதி நயனமுடை பரமண்டி பணிந்தேனே.

திருமகளுந் திருவடிவுந் திருவருளுந் தெள்ளரிவு
மருமையிலா மையுமுறவு மளப்பரிய வடியரசுங்
கருமமழிப் பளிப்பமைப்புங் கலக்கமிலா வகைநின்ற
வருள் வரதர் நிலையிலக்கி லம்பெனநா னமிழ்ந்தேனே.

ஆறுபயன் வேறில்லா வடியவர்க ளனைவர்க்கு
மாறுமதன் பயனுமிவை யொருகாலும் பலகாலு
மாறுபய ண்னெனவேகண் டருளாள ரடியிணைமேற்
கூறியநற் குணவுரைக ளிவைபத்துங் கோதிலவே.

சீரார்தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.

Courtesy : Sri Padhur Sudharsan Chakaravarthi

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here