Dayasatakam celebrates the auspicious Quality (Kalyana Guna ) of Mercy (Dhayaa) of the Lord of Thiruvenkatam. Of All the Kalyana Gunaas of Venkataadhri Sekhara Vibhu , His Dhayaa is the most important one for the uplift of the Chetanaas.The concept of Prapatti and Thiruvenkatamudayaan’s Dhayaa to realize the fruits of that Prapatti is the subject of this Stotra, composed by Swami Vedanta Desikan. For previous slokas from Dayasatakam, please refer: http://anudinam.org/?s=dayasatakam
cont…
Slokam 52
abimukha bhaava saMpad.h abi saMbhavinaaM bhavinaaM kvachidu palaxitaa kvachida bha~Ngura gUDha gatiH. vimala rasaavahaa vR^iShagirIsha daye bhavatI sapadi sarasvatIva shamayatyaghaM apratigham.h..52
அபிமுக பாவ ஸம்பத் அபிஸம்பவிநாம் பவிநாம் க்வசித் உபலக்ஷிதா க்வசித் அபங்குர கூடகதி: விமல ரஸ ஆவஹா வ்ருஷகிரி ஈச தயே பவதீ ஸபதி ஸரஸ்வதீ இவ சமயதி அகம் அப்ரதிகம்பொருள் – தயாதேவியே! ஸரஸ்வதி நதியானது ஒரு சில இடங்களில் கண்ணுக்குப் புலப்பட்டும், ஒரு சில இடங்களில் புலப்படாமலும் தடையில்லாமல் ஓடுவது போன்று நீயும் உள்ளாய். எப்படி எனில் – தெளிவாக உள்ள அன்பு என்பதைக் கொண்டு உன்னிடம் வருபவர்களின் தீராத பாவங்களை நீக்கி, வற்றாத செல்வம் அளிக்கிறாய்.
விளக்கம் – இங்கு மறைவதும் தெரிவதும் ஆகிய தன்மைகளுடன் நதி ஓடுவதாக ஏன் கூறவேண்டும்? நமக்குத் துன்பங்கள் ஏற்படுவது என்பது, நம்மை நல்வழியில் திருத்துவதற்காக, ஸ்ரீநிவாஸன் தனது கருணையால் அந்த நிலையை உண்டாக்குவதே ஆகும். இந்த நிலையில் தயாதேவி மறைமுகமாக உதவி செய்கிறாள். நமது பாவம் அனைத்தும் பலவிதமான துன்பம் என்ற தண்டனை மூலம் நீக்கப்படுகின்றன. ஆனால் வெளிப்பார்வைக்கு இது துன்பம் போன்று தோன்றலாம். இத்தகைய பாவங்கள் நீங்கினால் மட்டுமே மோக்ஷம் பெற இயலும் என்பதால் பாவங்களுக்கான ப்ராயச்சித்தம் துன்பம் என்னும் வடிவில் வருகிறது.
த்ரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி கலப்பதை நாம் காண்கிறோம். இந்த இடத்தில் கங்கையும் யமுனையும் போன்று நம்மால் ஸரஸ்வதீயைக் காண இயலவில்லை. இதன் காரணம் அவள் மறைமுகமாகக் கலப்பதே ஆகும். இதே போன்று தயாதேவியும் நமக்கு நேரிடையாகவும், மறைமுகமாகவும் உதவியபடி உள்ளாள்.
Slokam 53
api karuNe janasya taruNendu vibhUShaNataam.h api kamalaasana tvamapi dhaama vR^iShaadri pateH. taratamataa vashena tanute nanu te vitatiH parahita varShmaNaa pari pachelima kelimatI..53
அபி கருணே ஜநஸ்ய தருண இந்து விபூஷணதாம் அபி கமல ஆஸநத்வம் அபி தாம வ்ருஷாத்ரி பதே: தரதமதா வசேந தநுதே நநு தே விததி: பர ஹித வர்ஷ்மணா பரிபசேளிம கேளிமதீபொருள் – மற்றவர்களுக்கு நன்மை செய்வதை மட்டுமே குறிக்கோளாக உள்ள வடிவம் எடுத்த தயாதேவியே! உனது லீலைகள் எவ்விதம் உள்ளது என்றால் – உன்னை அண்டியவர்களின் தன்மைக்கு ஏற்ப இளம் சந்திரனை தலையில் சூடிய சிவனின் பதவியையும், தாமரையில் அமர்ந்த ப்ரம்மனின் பதவியையும், ஸ்ரீநிவாஸனின் இடமாகிய பரமபதத்தையும் அளிக்க வல்லதாகும்.
விளக்கம் – மிகுந்த புண்ணியத்தின் பலனாகவே ஒருவன் சிவனாகவோ அல்லது சிவனைவிட மேம்பட்ட ப்ரம்மனாகவோ ஆகமுடியும். இதனை தயாதேவியே செய்விக்கிறாள். இதனையும் மீறி மோக்ஷத்தை விரும்பி, அதற்கான உபாயமான ஸ்ரீநிவாஸனைக் கைக்கொண்டால் பரமபதத்தை அளிக்கிறாள்.
இங்கு மற்ற தெய்வங்களைத் தூஷிக்காமல் ஸ்வாமி தேசிகன் அழகான பதங்கள் மூலம் அவர்களைக் கூறுவது காண்க. தருண இந்து விபூஷணதாம் என்பது சிவனைக் குறிக்கும். கமல ஆஸன என்பது ப்ரம்மனைக் குறிக்கும்.
Slokam 54
dhR^ita bhuvanaa daye trividha gatyanukUlataraa vR^iShagiri naatha paada parirambhavatI bhavatI. avidita vaibhavaapi sura sindhuri vaatanute sakR^id.h avagaahamaanam.h apa taapam.h apaapam.h api..54
த்ருத புவநா தயே த்ரிவித கதி அநுகூல தரா வ்ருஷகிரி நாத பாத பரிரம்பவதீ பவதீ அவிதித வைபவா அபி ஸுரஸிந்து: இவ ஆதநுதே ஸக்ருத் அவகாஹமாநம் அப தாபம் அபாபம் அபிover the world and protect the chEthanams. You grant the fortunate ones anyone of the three kinds of Phalans as per their desires: Iswaryam, Kaivalyam and Moksham. When the chEthanams fall at the sacred feet of Your Lord, You as the KaruNA residing there flow out with joy to bless them. You have thus links to Your Lord’s Thiruvadi as GangA always. With the power of that sambhandham, You grant the Prapannan the boon of Moksham.
பொருள் – தயாதேவியே! இந்த உலகம் முழுவதையும் தாங்குபவளாக, மூன்றுவிதமான பலன்களுக்கு உதவியாக உள்ளவளாக, ஸ்ரீநிவாஸனின் திருவடிகளுடன் தொடர்பு கொண்டவளாக நீ உள்ளாய். இவ்விதம் உனது பெருமையை அறியாதபோதும் உன் தொடர்பு ஏற்பட்ட ஒருவன், புண்ணிய நீராகிய கங்கையில் நீராடியது போன்று தனது பாவம் அனைத்தும் நீங்கப் பெறுகிறான்.
விளக்கம் – இங்கு கங்கைக்கும் தயாதேவிக்கும் உள்ள ஒற்றுமையைக் கூறுகிறார். இவற்றை த்ரித புவந, த்ரிவித கதி அனுகூலதர, வ்ருஷகிரி நாத பாத பரிரம்பவதி – என்று விளக்குகிறார். த்ருத புவந என்றால் மூன்று உலகங்களையும் காப்பது என்பதாகும். கங்கையானது இந்த உலகிற்குத் தேவையான நீர் அளித்துக் காப்பதுபோல், இவள் கருணையால் காக்கிறாள். த்ரிவதகதி என்றால் மூன்றுவிதமான ஓட்டம் கொண்டது என்பதாகும். கங்கையானது – ஆகாயம், பூமி, பாதாளம் என்ற மூன்று இடங்களிலும் பாய்வது போன்று, இவள் ஐச்வர்யம், கைவல்யம், மற்றும் மோக்ஷம் ஆகியவற்றின் காரணமாக உள்ளாள். ஆக தயாதேவி ஐச்வர்யகாமன் (செல்வம் விரும்புபவன்), கைவல்யார்த்தி (பரமாத்மாவைவிடத் தனது ஆத்மாவை விருப்புவன்), மோக்ஷார்த்தி ஆகியவர்களுக்கு உதவுகிறாள். கங்கைக்கு மஹாவிஷ்ணுவின் திருவடித் தொடர்பு உள்ளது போல் இவளுக்கும் ஸ்ரீநிவாஸனின் திருவடிகளின் தொடர்பு உள்ளது.
English: Oppiliappan KOil Sri Varadachari SaThakOpan Swami
Tamil: Sridharan Swami of Srirangam