Today, January 16, 2014; Vijaya Varusha Thai Punarpoosam, Day 6 of the Irapathu Utsavam was celebrated at Sri Ranganathawamy Divya Desam, Srirangam. Namperumal along with the Azhwars, Swami Ramanujar and Koorathazhwan had purappadu in the morning.
The Irappathu utsavam started on January 11,2014. On this day, significantly, Sarva Vaikunta Mukkodi Ekadasi, was celebrated in grand manner at the temple. In his usual Raja Nadai with Savari Kondai, had purappadu through the Paramapada vasal in the morning. Namperumal blessed thousands of devotees who gathered in Srirangam across the country to witness this utsavam.
இராப்பத்து ஆறாம் நாள் உற்சவம் : இன்று அஹோபில மடத்திலிருந்து “சிறப்பு” , யானைமேல் எழுந்தருளப்பண்ணப்பட்டு கொண்டு வரப்படும். ஆதிவண்சடகோப ஜீயர் எழுந்தருளியிருந்த போது இராப்பத்து 5ஆம் உத்ஸவத்தில் 5ஆம் பத்து 2ஆம் திருவாய்மொழியில் “பொலிக பொலிக” என்று கலியின் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க இராமாநுசர் அவதரிக்கப் போகிறார் என்று அருளிச் செய்துள்ளதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து மறுநாள் நம்பெருமாளுக்கு தம்முடைய மடத்திலிருந்து சீர் விடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்த சீர் நடக்க வேண்டியதற்கான பொருளையும் தேவஸ்தான அதிகாரிகளிடமே ஒப்படைத்தார். ஆகையால் திருக்கொட்டாரத்தில் இருந்து அரிசி, பருப்பு, பூசணிக்காய் முதலிய சாமான்கள் அஹோபில மடத்துக்கு அனுப்பப்படும். நம்பெருமாள் திருமாமணி மண்டபம் எழுந்தருளித் திரை போட்ட பிறகு அஹோபில மடத்தார் முறைகார வாதூல தேசிகரையும், அத்யாபகர்களையும், மணியகாரரையும், ஸ்தானீகரையும் மடத்துக்கு எழுந்தருளப் பண்ணுவார்கள். அங்கு மடத்தாரால் ஸித்தமாய் வைக்கப்பட்டிருக்கும் சந்தன தாம்பூலங்கள் இப்போது அழைக்கப்பட்டவர்களுக்கு ஸ்தானீகரால் விநியோகம் செய்யப்படும். இப்படி கோஷ்டியான பிறகு தேவஸ்தானத்தார் அனுப்பி வைத்துள்ள துப்பட்டாவை மடத்து ஸ்ரீகார்யம் ஸ்வாமி, கோயில் யானைமேல் வெள்ளித்தட்டில் வைத்து, நம்பெருமாளுக்கு எதிரில் கொண்டு வருவார். கொட்டாரத்தில் இருந்து கொண்டு வந்த அரிசி பருப்பு சாமான்கள் மீண்டும் கொட்டாரத்துக்கே போய்விடும். நம்பெருமாள் ஸ்ரீகார்யம் ஸ்வாமிக்கு ஸேவை மரியாதை அனுக்ரஹிப்பார்.
நம்பெருமாள் நாழிகேட்டான் வாசலுக்குள் போய் மேற்கு முகமாகத் திரும்பியதும், வீணை மிராஸ் பாத்யதை கொண்டவர்களால் வீணை வாசிக்கப்படும்.பண்டைய காலங்களில் தாஸிகள் செய்யும் அபிநயத்தோடும், நட்டுவன் ஆலாபனம் செய்யும் ஸ்வர ஆலாபனைகளோடும்,தாள ம்ருதங்கங்களோடும், வீணை மிராசுக்காரருடைய வீணை கானத்
தோடும் நம்பெருமாள் ராஜமஹேந்திரன் திருச்சுற்றின் மேற்குப் பகுதி வழியாக மேலைப் படியை சென்றடைவார். சாத்தாத வைஷ்ணவர்கள் “எச்சரீகை எச்சரீகை” என்று கோஷித்துக்கொண்டு வாரி இறைக்கும் பச்சைக் கற்பூரப்பொடி கலந்த பூவிதழ்களோடும் நம்பெருமாள் மேலைப்படிபோய், வீணைகானத்தோடு கூடவே படியேற்றம் கண்டு, நேராக உள்ளே எழுந்தருளுவார்.
The previous days’ utsavams, please visit
- Srirangam Namperumal Vaikunta Ekadasi Purappadu
- Srirangam Namperumal Irapathu Utsavam Day 2
- Srirangam Namperumal Irapathu Utsavam Day 3
- Srirangam Namperumal Irapathu Utsavam Day 4
- Srirangam Namperumal Kanu Parivettai
- Srirangam Namperumal Irapathu Utsavam Day 5 – Part 2
The following are some of the photographs taken earlier today morning…
Photography and writeup by Vyjayanthi and Sundararajan; Tamil Writeup source: SrivaishnavaSri
Adiyargal Vaazhga, Aranga Nagar Vaazhga, Ahobila Madam Vaazhga, Anudinam Vaazhga.. Special thanks to Vyjayanthi mami & Sundararajan mama for the service they do.. Thanks a lot and may namperumal shower all prosperity to everyone; Please continue the good work.