On, 31 March 2014, Vijaya varusha Masi Revathi; Sri Rama Navami Utsavam Commenced in grand manner at Sri Parthasarathy Perumal Temple, Thiruvallikeni, Chennai. Sri Rama Navami Utsavam will take place for 9 days at Thiruvallikeni. Everday Sri Ramar will visit Dhavana Utsava Bungalow at Thulasinga Perumal kovil street, there perumal will have his Mandagappadi and starts to periya veedhi at Thiruvallikeni. On the day 1 Iyarpa Mudhal thiruvanthathi gosthi was recited. Lot of astikas took part in the purappadu and had the blessings of Diyvadampatis.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராமநவமி உற்சவம் – முதல் நாள்(31.03.2014) –
இத்திருத்தலத்திலே எழுந்தருளியுள்ள எல்லா எம்பெருமான்களில் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி, ஸ்ரீ ராமர், ஸ்ரீ கஜேந்திர வரதர் ஸ்வாமி இவர்களை திருமங்கை ஆழ்வாரும், ஸ்ரீமன்னாதனை ( ஸ்ரீ ரங்கனாதன் ) திருமழிசை ஆழ்வார் அவருடைய நான்முகன் திருவந்தாதியின் 35 ஆவது பாசுரத்திலும் மங்களாஸாஸனம் செய்தருளியுள்ளனர். பரதனும் தம்பி சத்ருக்கனனும், இலக்குமனோடு மைதிலியும் – இரவும் நன்பகலும் துதி செய்ய நின்ற, இராவணாந்தகனை எம்மானை – குரவமே கமழும் குளிர் பொழிலூடு, குயிலொடு மயில்கள் நின்றாட – இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத், திருவல்லிக்கேணிக் கண்டேனே.- திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி – இரண்டாம் பத்து – மூன்றாம் திருமொழி – ஏழாம் பாசுரம்.
இப்படி திருமங்கை ஆழ்வாரால் மங்களாஸாஸனம் செய்யப் பெற்ற ஸ்ரீ ராமர் உற்சவம் இன்று முதல் ஒன்பது நாட்களுக்கு இத் திருக்கோயிலிலே சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, ஸ்ரீ ராமர் திருவீதி புறப்பாட்டின் பொழுது தினசரி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவிலுள்ள தவன உற்சவ பங்களாவில் உள் புறப்பாடு மற்றும் மண்டகப்படி கண்டருளி பின் பெரிய வீதியில் வருவார்.
இன்று இயற்பா முதல் திருவந்தாதி கோஷ்டியுடன் ஸ்ரீ ராமர் புறப்பாடு கண்டருளினார்.
These are some of the Photos taken during the Occasion..
Tamil Writeup and Photography : Sri Raghavan Nemil Vijayaraghavachari