108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரத்தில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் திருக்கோயிலில் இன்று ஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம் 21ந் தேதி 05.01.2015 திங்கட்கிழமை இராப்பத்து உத்ஸவ ஐந்தாம் நாள் காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் புறப்பாடாகி உள் ப்ரகாரத்தில் வலம் வந்து பரமபத வாசலில் நுழைந்து மூன்றாம் ப்ரகாரமான “ செண்பகப்ரகாரத்தில் “ வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளி திருவாய்மொழி சேவாகாலம், சாற்றுமுறை முடிந்து, ஆழ்வார்கள் மரியாதை ஆகி இரவு 9 மணிக்கு ஆஸ்தானத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்
The following are some of the photos taken during the occasion….